மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச
|
[2713.0] |
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம், என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும் பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை
|
[2714.0] |
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன், என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல் தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
|
[2715.0] |
Back to Top |
என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
|
[2716.0] |
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர், மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல் முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்
|
[2717.0] |
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர் தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்
|
[2718.0] |
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
|
[2719.0] |
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால், இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார், என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில் மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,
|
[2720.0] |
Back to Top |
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும் தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே, அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங் கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க
|
[2721.0] |
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன், பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர் கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்
|
[2722.0] |
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண் கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்
|
[2723.0] |
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப, அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம், மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை
|
[2724.0] |
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர், மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண் மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து, மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
|
[2725.0] |
Back to Top |
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த, மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்
|
[2726.0] |
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய், மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார் பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
|
[2727.0] |
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப, அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம் துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்
|
[2728.0] |
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர் மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்
|
[2729.0] |
பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங் கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல், இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே
|
[2730.0] |
Back to Top |
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும் அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
|
[2731.0] |
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும், தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம், மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,.0
|
[2732.0] |
அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய் இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின் மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு
|
[2733.0] |
உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த் துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள் மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய
|
[2734.0] |
பொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல் சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும், இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும், பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்
|
[2735.0] |
Back to Top |
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து, பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள் மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு
|
[2736.0] |
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று, பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா, கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன் துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்
|
[2737.0] |
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே?, பின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின், மின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
|
[2738.0] |
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது, தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங் கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள் கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்
|
[2739.0] |
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும் கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை, தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,
|
[2740.0] |
Back to Top |
பன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன் மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல, தன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன் பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது
|
[2741.0] |
நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும், முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள், பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும், மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
|
[2742.0] |
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும், கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய், மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்
|
[2743.0] |
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்
|
[2744.0] |
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்
|
[2745.0] |
Back to Top |
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல, தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங் கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள
|
[2746.0] |
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும், தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி, அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?
|
[2747.0] |
பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல், பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு
|
[2748.0] |
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும் மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
|
[2749.0] |
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும், மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும், துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப, மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்
|
[2750.0] |
Back to Top |
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய், முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்
|
[2751.0] |
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே, என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும், பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த
|
[2752.0] |
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும். தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, - தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து, மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்
|
[2753.0] |
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே, முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்
|
[2754.0] |
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய, கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து, தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல் என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்
|
[2755.0] |
Back to Top |
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, - பேதையேன் கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின், நன்னறு வசமற் றாரானும் எய்தாமே, மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்
|
[2756.0] |
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி
|
[2757.0] |
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர் மன்னும் மருந்தறிவி ரில்லையே? - மல்விடையின் துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால் கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்
|
[2758.0] |
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின், இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெகில் கொடிதாய் நொடிதாகும், என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த
|
[2759.0] |
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள் முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின் சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல் அன்ன கடலை மலையிட் டணைகட்டி
|
[2760.0] |
Back to Top |
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து, பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண் மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்
|
[2761.0] |
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து, கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன் மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து
|
[2762.0] |